மணப்பெண்ணால் ஆர்யாவுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி..!! குழப்பத்தில் கலையகம்..!!


ஆர்யா 2003ஆம் ஆண்டு இயக்குனர் ஜீவா இயக்கிய உள்ளம் கேட்குமே என்ற திரைப்படத்தில் அறிமுகமானவர், இந்த திரைப்படத்தில் சாம், அசின், பூஜா, லைலா நடித்துள்ளனர்.

2006ஆம் ஆண்டு கலாபக் காதலன், பட்டியல், வட்டாரம் போன்ற திரைப்படங்களில் நடித்தார். இப்படி படிப்படியாக வளர்ந்து முன்னணி நட்சத்திரமாக ஜொலிக்க தொடங்கினார்

சமீபத்தில் இவருக்கு பெண் தேடும் படலம் தொடங்கியுள்ளனர், அதே நேரத்தில் ஹிந்தியின் முன்னணி சேனலான கலர்ஸ் சேனல், தமிழிலும் ஒளிபரப்பாகிவருகிறது

தமிழில் ஒளிபரப்பாகும் இந்த சேனலின் அறிமுக விழா சென்னையில் சில தினங்களுக்கு முன் துவங்கியது,

இந்த சேனலின் ஸ்பெஷல் என்னவென்றால், ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ என்கிற தொடர்தான் இதில் ஆர்யா நடித்து வருகிறார்..


இது குறித்து ஆர்யா கூறியது,

நான் எங்க வீட்டு மாப்பிள்ளை’ என்கிற தொடரில் நடித்து வருகிறேன்… இந்த தொடரில் 16 பெண்கள் என்னுடன் நடிக்க உள்ளனர்

இவர்களில் ஒருவரை எனக்கு பிடித்தால், அந்த பெண்ணையே நிஜத்திலும் திருமணம் செய்துகொள்ள ஐடியா உள்ளது, என கூறியுள்ளார்.

தற்போது இந்த தொடரில் பல பெண்கள் ஆர்யாவின் மனதை கவர்ந்தவர்களாக உள்ளனர்..


இதில் கனடாவை சேர்ந்த சூசனா என்ற பெண் ஆர்யாவிற்கு அதிர்ச்சியளிக்கும் செய்தியை கூறியுள்ளார்

சமீபத்தில் வெளியான ப்ரோமோ ஒன்றில் ஆர்யாவிடம் அந்த பெண் கூறியது,

எனக்கு ஏற்கனவே திருமணம் ஆகி டைவர்ஸ் ஆகி விட்டது., அதுமட்டுமின்றி ஒரு மகன் உள்ளான் என கூறி அதிர்ச்சியை ஏற்படுத்துகிறார்.

இதனால் ஷாக்கான ஆர்யா ஷோவில் அடுத்து என்ன செய்ய போவது என தெரியாமல் உள்ளார்

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி