வில்லன் நடிகரின் விவாகரத்து ஆன மனைவிக்கு இப்படியொரு நிலைமையா..? என்ன ஆனார் தெரியுமா..?


பொதுவாக ஒரு தம்பதியினர் டைவர்ஸ் ஆகிவிட்டால் பின்னர் ஒருவரை ஒருவர் திரும்பி கூட பார்ப்பதில்லை. ஆனால் நடிகர் பிரகாஷ்ராஜ் டைவர்ஸ் ஆன தனது மனைவிக்கு தயவு காட்டி உதவி செய்துள்ளதாக வெளிவந்துள்ள செய்தி அவருடைய தாராள மனதை வெளிப்படுத்தியுள்ளது.

பிரகாஷ்ராஜ்-லலிதகுமாரி தம்பதி மீது யார் கண் பட்டதோ தெரியவில்லை, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இருவரும் விவாகரத்து பெற்றனர். விவாகரத்துக்கு பின்னர் பிரகாஷ்ராஜ், பாலிவுட் நடிகை ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.


இந்த நிலையில் லலிதகுமாரி தற்போது குடும்ப செலவுக்கு கஷ்டத்துடன் இருப்பதாக கூறப்படுகிறது. இதனையறிந்த பிரகாஷ்ராஜ், விரைவில் தமிழில் தொடங்கப்படவுள்ள தொலைக்காட்சி ஒன்றில் சீரியல் தயாரிக்க லலிதகுமாரிக்கு நிதியுதவியும், ஸ்லாட்டும் ஒதுக்க பரிந்துரை செய்துள்ளார். டைவர்ஸ் ஆனாலும் அவருடைய நிரந்தர வருமானத்திற்கு உதவி செய்த பிரகாஷ்ராஜூக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!