இயக்குனருக்கு பச்சைக்கொடி காட்டிய நடிகை..!! எதற்காக தெரியுமா..?


அறம் படத்தின் இரண்டாம் பாகத்தை தொடங்க இயக்குனர் கோபி நயினாருக்கு பச்சைக் கொடி காட்டியுள்ளார் நடிகை நயன்தாரா.

அறம் படத்தின் இரண்டாம் பாகத்தை தொடங்க இயக்குனர் கோபி நயினாருக்கு பச்சைக் கொடி காட்டியுள்ளார் நடிகை நயன்தாரா.

இயக்குனர் கோபி இயக்கத்தில், முன்னணி நடிகை நயன்தாராவின் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் அறம். மேலும் இந்தப் படம் நயனின் வித்தியாசமான நடிப்பில் வெளியாகியுள்ளது.

இந்தப் படத்தை கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும் ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை வாங்கி வெளியிட்டு இருக்கிறது. இப்படம் சினிமா விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பரவலான வரவேற்பினை பெற்றுள்ளது.

அறமானது சமூகத்தில் நிகழ்ந்திடும் அவலங்களை அப்பட்டமாக பேசியுள்ளது.


இப்படம் முழுவதும் கதைக்கு ஏற்ப நயன்தாரா தன்னுடைய நடிப்பில் சிறப்பான தோற்றத்தில் வலம் வந்துள்ளார்.

ஒவ்வொரு காட்சியும், அவர் பேசும் வசனங்களும், திரைக்கதையும் ரசிகர்களை உற்சாகம் படுத்தியுள்ளது. சமூக அவலங்களை சாடி எழுவனவே மக்களுக்கான கலைகளாக இருந்திட முடியுமென்ற விதியினை மெய்ப்பித்துள்ளது அறம் திரைப்படம்.

இந்த நிலையில், அறம் படத்தின் தொடர்ச்சியாக இரண்டாம் பாகத்தை எடுக்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. இது குறித்து தயாரிப்பாளர் ராஜேஷ் கூறுகையில், இரண்டாம் பாகத்தின் பணிகள் துவங்கப்பட்டு விட்டது. நயன்தாராவும் இரண்டாம் பாகத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். விரைவில் படப்பிடிப்பு சம்பந்தமான முழு விவரங்கள் தெரிவிக்கப்படும் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி#