பிரபல நடிகை உட்பட பல திரை பிரபலங்களுக்கு சம்மன்..!! அதிரடி உத்தரவிட்ட நீதிபதி..!!


ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் ஈடுபட்ட நடிகர் நடிகைகளுக்கும் சம்மன் அனுப்பப் பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த ஆண்டு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை எப்பாடு பட்டாவது நடத்தியே தீர வேண்டும் என்று ஒட்டுமொத்த இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்களும் ஒன்று திரண்டு போராடிய போராட்டம் வரலாறு காணாத ஒரு நிகழ்வாக அமைந்தது.

இந்நிலையில் தற்போது அந்தப் போராட்டத்திற்குத் துணையாக நின்ற காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார் என்ற தகவல் வெளியானது. எனவே இந்தப் போராட்டத்தின் வழக்கு குறித்து விசாரித்து வந்த நீதிபதி, ஜல்லிக்கட்டு போராட்டம் நடத்திய இடங்களான சென்னை, சேலம் மற்றும் மதுரை ஆகிய இடங்களுக்கு சென்று விசாரணை நடத்தி வந்தார்.

இந்த விசாரணை குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நீதிபதி கூறுகையில், ஜல்லிக்கட்டு போராட்டம் குறித்து 1951 பேருக்கு பிரமாண பத்திரம் அனுப்பப்பட்டுள்ளது என்றும், 108 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.


அதோடு மட்டுமல்லாது இந்தப் போராட்டத்தின் போது பணியில் இருந்த, காவல் துறையினர்கள் மற்றும் நடிகர் நடிகைகளுக்கும் சம்மன் அனுப்பப் பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் அந்தப் போராட்டத்தில் பங்கேற்ற நடிகர் ராகவா லாரன்ஸ், மன்சூர் அலிகான், ஜீ.வி.பிரகாஷ் மற்றும் நயன்தாரா உள்ளிட்ட பலருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி#