மீண்டும் படம் இயக்க வரும் தனுஷ் by priya | @ | February 3, 2023 9:21 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக இருக்கும் தனுஷ் இந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார். ஹாலிவுட் படத்திலும் நடித்துள்ளார். அவரது நடிப்பில் உருவாகி உள்ள வாத்தி படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாக இருக்கிறது. தற்போது கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு மார்ச் மாதம் இறுதியில் முடியும் என்று தெரிகிறது. அதன்பிறகு படம் டைரக்டு செய்ய முடிவு செய்து இருப்பதாகவும் இதன் படப்பிடிப்பை மே மாதம் முதல் வாரத்தில் தொடங்க திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்துக்கான திரைக்கதையை தனுஷ் எழுதி முடித்து விட்டதாக கூறப்படுகிறது. இதில் விஷ்ணு விஷால், எஸ்.ஜே.சூர்யா, துஷாரா விஜயன் ஆகியோர் நடிப்பதாக கூறப்படுகிறது. வடசென்னை பின்னணியில் கதை உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த படத்தை தனுஷ் இயக்குவதுடன் ஒரு சில காட்சிகளில் கவுரவ தோற்றத்திலும் நடிக்க உள்ளார். ஏற்கனவே ராஜ்கிரண் நடித்த ப.பாண்டி படத்தை தனுஷ் இயக்கி இருந்தார். அந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts படப்பிடிப்புக்கு சரியாக வருவது இல்லையா? வதந்திக்கு யோகிபாபு விளக்கம் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து… ரசிகரின் ஆபாச கேள்வியால் நடிகை ஷாலு ஷம்மு கோபம் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து… விஜய் போல் என்னால் நடனம் ஆட முடியாது நடிகர் ஷாருக்கான் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து…