தளபதி விஜய் எப்போதும் எல்லோரிடத்திலும் ஜாலியாக பழக கூடியவர். ஆனால், வெளியில் அவர் எப்போதும் அமைதியாக தான் இருப்பார்.
அவருடன் நெருங்கி பழகியவர்களுக்கு தான் தெரியும் விஜய் எத்தனை ஜாலியான மனிதர் என்று, சில வருடங்களுக்கு முன் விஜய் நடித்த நண்பன் படம் வந்தது.
அப்படம் மெகா ஹிட் ஆக, அதன் வெள்ளி விழா நிகழ்ச்சியில் விஜய் கலந்துக்கொள்ள, அதை சிவகார்த்திகேயன் தொகுத்து வழங்கினார்.
அப்போது சிவகார்த்திகேயன் கேள்வி கேட்க, பதிலுக்கு விஜய் சொல்ல மறுக்க, ‘அண்ணா உங்களிடம் நான் ஏதாவது வம்பு செய்திருக்கனா?’ என் கேட்டார்.
அதற்கு விஜய்யும் ஜாலியாக மேடையில் ‘செய்திருக்கீயே, செய்திருக்கீயே’ என்று சொல்ல அரங்கமே அதிர்ந்தது, ஆனால், சிவகார்த்திகேயன் என்ன செய்தார் என்பதை விஜய் வெளியே சொல்லவில்லை.
*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி