சிம்பு ஒரு திறமையான நடிகர் என்பதை தாண்டி மக்கள் மீதும், தன் ரசிகர்கள் மீதும் அதீத அன்பு வைத்திருப்பவர். அண்மையில் அவருக்கு பெரும் வரவேற்புகள் சமூகவலைதளங்களில் கிடைத்தது.
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் செந்தில் கணேஷ். நாட்டுப்புற பாடல்களால் மேடையை அழகுபடுத்தியதோடு அனைவரையும் ஈர்த்துவிட்டார்.
அவருடைய மனைவி ராஜலெட்சுமியில் இதில் பாடினார். நிகழ்ச்சியின் இறுதியில் செந்தில் வெற்றியாளராக தேர்வானார். இந்நிலையில் சிம்பு அவருக்கு போன் மூலம் அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
முடிவு அறிவிக்கப்பட்ட அன்று நள்ளிரவு 12 மணிக்கு பேசிய சிம்பு செந்திலிடம் நீங்கள் வெற்றி பெற்றதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. ஒரு நாள் வீட்டுக்கு வரவேண்டும். நான் விருந்து வைக்கிறேன் என கூறினாராம்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!