தவறாக பேசிய நபர்.. பதிலடி கொடுத்த நடிகர் சௌந்தரராஜா

சுந்தர பாண்டியன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமானவர் நடிகர் சௌந்தரராஜா.

இதன்பின் தர்மதுரை, கடைக்குட்டி சிங்கம், பிகில், ஜகமே தந்திரம் போன்ற படங்களில் கவனிக்க வைக்கும் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

தற்போது சீனு ராமசாமி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி வரும் இடி முழக்கம் என்ற படத்தில் சௌந்தரராஜா நடித்து வருகிறார்.

நடிகர் சௌந்தரராஜா சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடினார். இவருக்கு பலரும் சமூக வலைத்தளத்தில் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

அப்போது நெட்டிசன் ஒருவர் ‘இந்த நாய் யாருன்னே தெரியாது’ என்று பதிவு செய்தார். இதற்கு ‘நான் நன்றி உள்ள நாய் நண்பா’ என்று நடிகர் சௌந்தரராஜா கூலாக பதிலடி கொடுத்து இருக்கிறார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!