பிரபல நடிகர்களால் இயக்குனருக்கு இப்படியொரு நிலைமையா..? அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!!


சினிமாவில் இயக்குனர்கள் அவர்களுக்கு பிடித்த நடிகரை நினைத்து நிறைய கதைகள் எழுதுவார்கள். ஆனால் பல விஷயங்களால் அவர்களால் நினைத்த நடிகர்களுடன் இணைந்து படம் எடுக்க முடியாது.

வணக்கம் சென்னை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான கிருத்திகா உதயநிதி இப்போது விஜய் ஆண்டனி அவர்களை வைத்து காளி என்ற படத்தை இயக்கியிருக்கிறார். அண்மையில் ஒரு பேட்டியில் இவரிடம், முதல் படத்திற்கு பிறகு ஏன் நீண்ட இடைவேளை என்று கேள்வி கேட்டுள்ளனர்.

அதற்கு அவர், நான் கதை எழுதிவிட்டேன், ஆனால் நடிகர், தயாரிப்பாளருக்காக தான் காத்துக் கொண்டிருந்தேன். இந்த கதையை சிம்பு-தனுஷ் இருவரிடமும் கூறியிருந்தேன், இருவருக்கும் பிடித்துவிட்டது.

ஆனால் சில காரணங்களால் அவர்களால் நடிக்க முடியவில்லை. பின் தான் இந்த கதை விஜய் ஆண்டனிக்கு பிடித்து போக அவர் நடித்திருக்கிறார் என்றார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி