உங்களுடைய அன்பை தாருங்கள்… உயிரை வேண்டாம்…!! ரசிகர்களை எச்சரித்த சூர்யா..!!


சூர்யா பொங்கல் பண்டிகையை குடும்பத்தாரோடு கொண்டாடாமல் தனது தானா சேர்ந்த கூட்டம் படத்தின் தெலுங்கு பதிப்பான கேங் சக்ஸ் மீட்களில் கலந்து கொண்டார்.

சூர்யா ஆந்திரா சென்ற நேரத்தில் அவரது ரசிகர்கள் பைக் பேரணி நடத்தினார்கள்.

பைக் பேரணியில் கலந்து கொண்ட ரசிகர்கள் யாருமே ஹெல்மெட் அணியவில்லை. இதை பார்த்த சூர்யா தனது காரில் இருந்து இறங்கி வந்து ரசிகர்களை கோபமாக திட்டியபோது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.

பைக் பேரணியில் வந்ததில் ஒரு பைக் ஸ்கிட் ஆகி சூர்யாவின் காருக்கு அடியில் சென்றுள்ளது. நல்ல வேளையாக யாருக்கும் எதுவும் ஆகவில்லை.


இதை பார்த்த பிறகே சூர்யா கடுமையாக கோபப்பட்டு ரசிகர்களை திட்டியுள்ளார்.

என் தம்பிகள் ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டுவது எனக்கு பிடிக்கவில்லை. பாதுகாப்பு முக்கியம். உங்களின் அன்பை எனக்கு கொடுத்தால் போதும், உயிரை அல்ல என்று சூர்யா தெரிவித்துள்ளார்.

சாலைகளில் பலர் பைக்கில் வேகமாக செல்வதை பார்க்கிறேன். ஒருவர் கூட ஹெல்மெட் அணியவில்லை. தயவு செய்து ஹெல்மெட் அணியுங்கள். வாழ்க்கை முக்கியம் என்று சூர்யா தெரிவித்துள்ளார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி