பாலியல் தொல்லை பற்றி நடிகைகள் இதற்காகதான் பேசுவதில்லை..!! பிரபல நடிகை ஓபன் டாக்..!!


பாலியல் தொல்லை பற்றி பேசினால் நடிகைகளின் கெரியர் நாசமாகிவிடும் என்று ராதிகா ஆப்தே தெரிவித்துள்ளார். ஆர். பால்கி இயக்கத்தில் அக்ஷய் குமார், ராதிகா ஆப்தே, சோனம் கபூர் உள்ளிட்டோர் நடித்துள்ள பேட்மேன் படம் வரும் 25ம் தேதி ரிலீஸாக உள்ளது.

இந்த படத்தை அக்ஷயின் மனைவி ட்விங்கிள் கன்னா தயாரித்துள்ளார். இந்நிலையில் ராதிகா ஆப்தே பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது,


பாலியல் தொல்லை பற்றி ஏன் யாரும் பேசுவது இல்லை என்றால் தைரியமாக பேசினால் அவர்களின் கெரியர் நாசமாகிவிடும். அவர்களின் கனவு கனவாகவே போய்விடும் அதனால் தான் நடிகைகள் யாரும் பாலியல் தொல்லை குறித்து வாய் திறப்பது இல்லை.

பாலியல் தொல்லைகளுக்கு எதிராக பேச வேண்டும். இல்லை என்றால் அதை நிறுத்த முடியாது. பேசினால் மட்டும் போதாது முடியாது என்றும் கூற வேண்டும்.


பாலியல் தொல்லை குறித்து துணிச்சலாக பேசுவோருக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும். இந்த மாற்றம் உடனே நடந்துவிடாது. மாற்றம் ஏற்பட மக்களுக்கு தைரியம் வர வேண்டும்.

அனுபவம் எதுவும் இல்லை. எனக்கு ஏற்பட்ட சில அனுபவங்கள் பற்றி நான் ஏற்கனவே பேசிவிட்டேன். நான் எதையும் மறைப்பது இல்லை. அதே சமயம் மற்றவர்களின் பாலியல் தொல்லை பிரச்சனை பற்றி பேசவும் மாட்டேன் என்றார் ராதிகா ஆப்தே.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி