சினிமாக்காரங்கனா இப்படிதான் இருக்கனுமா…? செம்ம கடுப்பாகிய விக்னேஷ் சிவன்..!!


சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘தானா சேர்ந்த கூட்டம்’ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சூர்யா அடுத்ததாக இயக்குநர், ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிக்கவிருப்பதாகத் தெரிவித்துள்ளார். இந்நிலையில், பிரபல தொலைக்காட்சியின் தொகுப்பாளினிகள் இருவர் சூர்யாவின் உயரத்தை கிண்டல் அடித்தது சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது.

கே.வி.ஆனந்த் டைரக்‌ஷன் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படம் வெளியானதையடுத்து செல்வராகவன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் சூர்யா. அதற்குப் பிறகு நடிக்கவிருக்கும் சூர்யாவின் 37-வது படத்தை கே.வி.ஆனந்த் இயக்க இருப்பது உறுதியாகி உள்ளது.


‘சூர்யா 37’ படத்தில் அமிதாப் ‘சூர்யா 37’ படத்தில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் நடிக்கிறார் எனக் கூறப்படுகிறது.

இந்தப் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க அமிதாப் பச்சனுடன் பேச்சுவார்த்தை நடந்ததாகக் தகவல்கள் வெளியாகின. உயரத்தை கிண்டல் செய்த தொகுப்பாளினிகள் இதை வைத்து பிரபல தொலைக்காட்சியில் கிசுகிசு நிகழ்ச்சி ஒன்றின் தொகுப்பாளினிகள் இருவர் சூர்யாவின் உயரத்தை கிண்டல் செய்யும் விதமாக பேசியுள்ளனர்.

“அனுஷ்காவுக்காவது ஹீல்ஸ் போட்டுத்தான் நடிச்சாரு… அமிதாப் பச்சனுக்கு ஸ்டூல் போட்டு ஏறி நின்னு தான் அவர் பேசணும்” என உயரத்தை கிண்டல் செய்துள்ளனர்.


உச்சகட்ட கோபத்தில் ரசிகர்கள் இந்த நிகழ்வு சூர்யா ரசிகர்கள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், சூர்யா ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் சூர்யா பேசும் வசனத்தைக் குறிப்பிட்டு பதிலடி கொடுத்து வருகின்றனர். இளிச்சவாயன்கள்னு நினைச்சிட்டாங்க இந்நிலையில், டைரக்டர் விக்னேஷ் சிவன், “இப்போ எல்லாம் திரைத் துறையினரை எல்லோருக்கும் இளிச்சவாயன்களாக நினைச்சிட்டாங்க. அவ்வளவு மரியாதைக்குரிய மனிதருக்கு சுத்தமா மரியாதையே கொடுக்கல” என வருந்தியுள்ளார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி