மெர்சல் என்ற பிரம்மாண்ட படத்தை இயக்கிய களிப்பில் இருக்கிறார் இயக்குனர் அட்லீ. தன்னுடைய அடுத்த படத்தை தொடங்குவதற்கு முன் குடும்பத்தினருடன் நேரம் செலவழித்து வருகிறார்.
இவர் ஏற்கெனவே மெர்சல் படத்தின் போது ஆளப்போறான் தமிழன் என்ற பெயரை புக் செய்திருந்தார். அதனால் அடுத்த படமும் தமிழை மையப்படுத்தி இருக்கும் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில் அட்லீ அடுத்து மூன்று நடிகர்களை வைத்து ஒரு படம் இயக்க போவதாக தகவல்கள் வருகின்றன.
அந்த பட கதையில் விஜய் நடிக்கலாம் அல்லது வேறொரு நடிகர்களுடன் அட்லீ கூட்டணி அமைக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!