பிரச்சார கூட்டத்தில் தவறாக கை வைத்த நபர்- கோபத்தில் பளார் என அறைந்த நடிகை குஷ்பு, பரபரப்பு வீடியோ


2019-ம் ஆண்டிற்கான நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் அனைத்து அரசியல் கட்சிகளும் பிரச்சாரத்தில் படு பிஸியாக இறங்கியுள்ளன.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நடிகை குஷ்பூவும் தன்னுடைய கட்சிக்காக பரபரப்பாக ஒட்டி சேகரித்து வருகிறார். ட்விட்டர் பக்கங்களிலும் காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டளிக்குமாறு தொடர்ந்து நினைவு படுத்தி வருகிறார்.

இந்நிலையில் தற்போது குஷ்பூ கர்நாடகாவில் ஒட்டு சேகரிக்க சென்ற போது தொண்டர் ஒருவரை கன்னத்தில் சரமாரியாக அறைந்துள்ளார்.

அந்த தொண்டர் தவறான எண்ணத்தில் கை வைத்ததால் தான் குஷ்பூ அவரை பளாரென அறைந்ததாக கூறப்படுகிறது.