என் கணவருக்கு நான் கொடுத்த பிறந்தநாள் பரிசு அவர் மறக்க மாட்டார்.!

சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சி மூலம் தமிழர்களின் கவனத்திற்கு வந்தவர் செந்தில்-ராஜலட்சுமி. மக்கள் இசையை பெருமைப்படுத்தி வரும் இவர்கள் இப்போது திரைப்படங்களில் அதிகம் பாட ஆரம்பித்துவிட்டனர்.

அண்மையில் தனது கணவர் செந்தில் அவர்களின் பிறந்தநாளுக்கு கொடுத்த ஸ்பெஷல் பரிசு குறித்து ஒரு பேட்டி கொடுத்துள்ளார் ராஜலட்சுமி. அதில் அவர், எனது கணவர் நீண்ட நாட்களாக ஒரு ஆர்மோனியம் வாங்க ஆசைப்பட்டார், அதை நான் பிறந்தநாளுக்கு கொடுக்க ஆசைப்பட்டேன்.

அதை பெரிய ஆளுமைகொண்டவர்களின் கையொப்பம் வாங்க ஆசைப்பட்டேன். அதன்படி எதற்சையாக இளையராஜா அவர்களை சந்திக்க வாய்ப்பு கிடைக்க அவரிடன் ஒரு ஆர்மோனியத்தில் கையொப்பம் போட கேட்டேன்.

அவரும் ஒப்புக்கொண்டு எங்களது ஆசையை நிறைவேற்றினார், அது எங்களுக்கு சந்தோஷமாக இருந்தது என்று பேசியுள்ளார்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.