சம்பள மோசடியால் விரக்தி… சினிமாவை விட்டு விலகிய நடிகர்

பிரபல இந்தி நடிகர் ரஜத் பேடி. இவர் சினிமாவை விட்டு விலகி விட்டார். இதற்கான காரணங்கள் குறித்து ரஜத் பேடி அளித்துள்ள பேட்டியில், “ஹிருத்திக் ரோஷனின் கோயி மில் கயா இந்தி படத்தில் நான் வில்லனாக நடித்து இருந்தேன். எனது கதாபாத்திரம் கதாநாயகன் மற்றும் நாயகிக்கு இணையாக இருந்தது. இந்த படத்தில் கஷ்டப்பட்டு நடித்து இருந்தேன். ஆனால் படம் முடிவடைந்த பிறகு எடிட்டிங்கில் நான் நடித்த அனைத்து காட்சிகளையும் நீக்கி விட்டனர். இது எனக்கு பெரிய ஏமாற்றத்தை அளித்தது. அதன்பிறகு சன்னி தியோலுடன் இணைந்து ஒரு படத்தில் நடித்தேன். எனக்கு சம்பளத்தை காசோலையாக கொடுத்தனர். வங்கியில் செலுத்தியபோது பணம் இல்லாமல் அது திரும்பி வந்தது.

இதற்காக கோர்ட்டுக்கு சென்று போராடுவது தேவையா? என்று என்னை நானே கேட்டுக்கொண்டேன். எனது நண்பர்கள் ரூ.2 ஆயிரம் கோடி பரிவர்த்தனை நடக்கும் பெரிய கம்பெனிகளை நடத்துகிறார்கள். நான் என்ன செய்து கொண்டு இருக்கிறேன்? என்று தோன்றியது. சம்பாத்தியம் முக்கியம் என்றும் நினைத்தேன். அதனால் சினிமாவை விட்டு விலகி விட்டேன்” என்றார்.


  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!