மேடையில் அனைவரும் முன் கண்கலங்கிய நடிகர் அல்லு அர்ஜுன் ! வருத்தத்தில் ரசிகர்கள்..

தென்னிந்திய அளவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன், இவரின் திரைப்படங்களுக்கு தொடர்ந்து இந்தியா முழுவதும் வரவேற்பு கிடைத்து வருகிறது.

அந்த வகையில் இவர் நடிப்பில் இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் புஷ்பா.

பெரிய எதிர்பார்ப்பிற்கு பின் ஐந்து மொழிகளிலும் வெளியாகியுள்ள புஷ்பா திரைப்படம் பாக்ஸ் ஆஃபீஸில் வசூல் சாதனை படைத்து வருகிறது.

இதனிடையே தற்போது இப்படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பினால் படக்குழு நன்றி தெரிவிக்கும் வகையில் Thank You Meet நடத்தியுள்ளனர்.

அதில் அல்லு அர்ஜுன் மேடையில் திடீரென இயக்குனர் சுகுமார் குறித்து பேசியபடி கண்கலங்கியுள்ளார். அந்த வீடியோவை தற்போது ரசிகர்கள் இணையத்தில் பரப்பி வருகின்றனர்.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!