மும்பையில் ஜாலியாக வாக்கிங் செய்யும் சூர்யா – ஜோதிகா

மும்பை சிட்டியில் சூர்யா மற்றும் ஜோதிகா ஆகிய இருவரும் வாக்கிங் செல்லும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது.

சூர்யா நடித்த ’ஜெய்பீம்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதனை அடுத்து சூர்யா நடிப்பில் ’எதற்கும் துணிந்தவன்’ என்ற படம் உருவாகியுள்ளது. பாண்டிராஜ் இயக்கியுள்ள இப்படம் பிப்ரவரி 4ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் மும்பையில் சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் அதிகாலையில் வாக்கிங் சென்றிருக்கிறார். இதை ரசிகர்கள் ஒருவர் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!