இதுபோன்ற படங்களில் நடிக்க எனக்கு விருப்பமில்லை – விஜய் சேதுபதி

விஜய்சேதுபதி நடிப்பில் விக்ரம், மாமனிதன் படங்கள் அடுத்தடுத்து வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. மேலும் 3 இந்தி படங்கள், ஒரு தெலுங்கு படம் கைவசம் உள்ளன. தற்போது தமிழில் பொன்ராம் இயக்கத்தில் கார்த்திகேயன் சந்தானம் தயாரித்துள்ள ‘டி.எஸ்.பி’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் விஜய் சேதுபதி போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அனு கீர்த்தி நாயகியாக நடித்துள்ளார். இப்படம் டிசம்பர் 2-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் விஜய்சேதுபதி கூறும்போது, “நான் வணிக படங்களில் அதிகமாக நடிப்பது இல்லை. பொன்ராம் இயக்கும் படத்தில் நடிப்பேன் என்று கனவிலும் நினைக்கவில்லை. ஆனால் அவர் சொன்ன கதை என்னை ஈர்த்தது. என்னை முழுவதுமாக மாற்றி விட்டார். இந்த படத்தில் நடித்தது எனக்கு புது அனுபவமாக இருந்தது. கமல்ஹாசன் என்னை வாழ்த்தியது மகிழ்ச்சியாக உள்ளது. சினிமாவில் எதை புதுமையாக செய்ய நினைத்தாலும் அதற்கு பெரிய ஊக்கமாக கமல்ஹாசன் இருக்கிறார். அவர் செய்த சாதனைகள் இன்னும் பல தலைமுறைகள் கடந்தும் பேசப்படும். சினிமாவில் சாதிக்க பலருக்கும் ஊக்கமாக இருக்கிறார்” என்றார்.


  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!