நித்யானந்தாவை சந்தித்தது உண்மையா? – சின்மயி விளக்கம்

சாமியார் நித்யானந்தாவை நேரில் சந்தித்தது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிய நிலையில், அதுகுறித்து சின்மயி விளக்கம் அளித்துள்ளார்.

சர்வதேச அளவில் பிரபலமான மீ டூ இயக்கத்தின் மூலம் பெண்கள், தங்களுக்கு ஆண்களால் ஏற்பட்ட பாலியல் சீண்டல்கள் குறித்து வெளிப்படையாக சொல்ல தொடங்கினர். பாடல் ஆசிரியர் வைரமுத்துவால் தனக்கு ஏற்பட்ட பாலியல் ரீதியிலான துன்புறுத்தல்கள் குறித்து வெளிப்படையாக பகிர்ந்தார் பாடகி சின்மயி. இது தமிழ் சினிமா வட்டாரத்தில் புயலை கிளப்பியது. சிலர் அவரை அவதூறாக பேசினர். பலரும் ஆதரித்தனர். தொடர்ந்து பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களுக்கு குரல் கொடுத்து வருகிறார்.

இந்நிலையில், சாமியார் நித்யானந்தாவை சின்மயியும், அவரது தாயாரும் சந்தித்தது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. அந்த புகைப்படம் உண்மையில்லை என்றும் அது மார்பிங் செய்யப்பட்டது என கூறிய சின்மயி, அது போலி என்பதற்கான ஆதாரத்தையும் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் இதையெல்லாம் சும்மா செய்கிறார்களா? அல்லது யாராவது பணம் கொடுத்து செய்ய சொல்கிறார்களா? என அவர் காட்டமாக பதிலளித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!