கேரள மக்களுக்காக தனது திருமணத்தை தள்ளி வைத்த ‘தலைவா’ நடிகர்..!! வியப்பில் ரசிகர்கள்..!!


கேரளா வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யும் வகையில், நிவாரணப் பணிகளுக்காக தனது திருமணத்தையே நிறுத்தியுள்ளார் தலைவா நடிகர் ராஜீவ் பிள்ளை.

கேரளா மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டம் திருவல்லா அருகிலுள்ள நன்னூரைச் சேர்ந்தவர் நடிகர் ராஜீவ் பிள்ளை. இவர், தமிழ் சினிமாவில், விஜய்யின் தலைவா, விஷால் நடிப்பில் வந்த ஆம்பள, அவியல், 7 நாட்கள் உள்பட படங்களிலும், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் பல படங்களிலும் நடித்துள்ளார்.


இந்த நிலையில், தொலைக்காட்சி ஒன்றில், தொகுப்பாளராக இருக்கும் அஜிதா பாலகிருஷ்ணன் என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர்களுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் நிச்சயதார்த்தமும் நடந்துள்ளது. இதையடுத்து திருமணம் நடக்கயிருந்தது. ஆனால், கேரளா மாநிலமே வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள போது தான் எப்படி திருமணம் செய்து கொள்ள முடியும் என்று எண்ணி, தனது திருமணத்தை நிறுத்திவிட்டு, நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!