தமிழில் அறிமுகமாகும் தேசிய விருது பாடகி நஞ்சம்மா

கேரள மாநிலம் அட்டப்பாடி மலைக்கிராமத்தை சேர்ந்தவர் நஞ்சம்மா. பழங்குடி இனத்தை சேர்ந்த நஞ்சம்மா, கிராமிய பாடல்கள் பாடுவதில் வல்லவர். இது பற்றி அறிந்த கலை உலகினர், இவருக்கு 2020-ஆம் ஆண்டு வெளியான ‘அய்யப்பனும் கோஷியும்’ என்ற படத்தில் பாடல் பாட வாய்ப்பு அளித்தனர்.

அந்த படத்தில் இவர் ‘கலக்காத சந்தனமேரம் வெகுவோக பூதிரிக்கும்’ என்ற பாடலை பாடினார். படம் வெளியான பின்னர் இந்த பாடல் பட்டி, தொட்டி எங்கும் ஒலிக்க தொடங்கியது. இதையடுத்து மத்திய அரசு இந்த பாடலை பாடியதற்காக சமீபத்தில் இவருக்கு சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருதை அறிவித்தது.

இந்நிலையில், அவர் தமிழிலும் பாடகியாக அறிமுகமாக உள்ளார். ‘ஆதாம்’ என்ற மலையாள படத்தை இயக்கிய இயக்குனர் சமர் ‘சீன் நம்பர் 62’ என்கிற படம் மூலம் தமிழில் அறிமுகமாகியுள்ளார். இந்தப்படத்தில் ‘என் சேவல்’ என்ற பாடலை பாடகர் வேல்முருகனுடன் இணைந்து நஞ்சம்மா பாடியுள்ளார். இந்தப் பாடல் சமூக வலைதளத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.


  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!