ஒரு ரசிகனாக தான் என் படங்களை நான் பார்க்கிறேன் – அருண் விஜய்

அருண் விஜய்இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடித்துள்ள படம் யானை. இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்திருக்கிறார். நகைச்சுவை வேடத்தில் யோகிபாபு நடிக்க, பிரகாஷ் ராஜ், ராதிகா, தலைவாசல் விஜய், குக் வித் கோமாளி புகழ், அம்மு அபிராமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு கோபிநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். கிராமத்து பின்னணியில் தயாராகி இருக்கும் இப்படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் வருகின்ற ஜூலை 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் கதாநாயகன் அருண் விஜய் மாலை மலர் நேயர்களுக்காக பிரத்யேகமாக பேட்டி அளித்தார். யானை படம் குறித்தும் அவரின் சினிமா பயணம் குறித்தும் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

“யானை திரைப்படம் அனைவரையும் எளிமையாக இணைக்கும் படமாக இருக்கும். இயக்குனர் ஹரி படங்களில் இருக்கும் அனைத்து விஷயங்களும் இப்படத்திலும் இருக்கும். யானை படத்தின் டிரைலரை மக்கள் வரவேற்ற விதத்தை நேரடியா பார்க்கும் போது மிகவும் சந்தோஷமாக இருந்தது. அது பெரும் உற்சாகத்தை கொடுத்தது. எப்போதும் தோற்றுவிட்டேன் என்று நினைக்கக் கூடாது அதில் இருந்து மீண்டு வர நினைக்க வேண்டும். ஒரு ரசிகனாக தான் என் படங்களை நான் பார்க்கிறேன். என்னை வியக்க வைக்கும் கதாபாத்திரம் இருந்தால் அதில் நான் நடிப்பேன்” என்றார் அருண் விஜய்.

  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!