ஆபாச காட்சிகளாக மாறி வரும் சீரியல் நாடகங்கள்..!! தர்மசங்கடத்தில் இல்லதரசிகள்..!!


தற்போதைய காலக்கட்டத்தில் குடும்பத்துடன் பார்க்க கூடிய சினிமாவுக்கள் என்பது குறைந்து விட்டது. இதனால் குடும்ப பெண்கள் வீட்டிலேயே சீரியல் பார்க்க உட்கார்ந்து விட்டனர். எனவே தொலைக்காட்சி சீரியல்களின் எண்ணிக்கை ஆரம்பித்து விட்டது.

ஆனால் தற்போது சீரியல்களிலும் ஆபாசம் தலைதூக்க ஆரம்பித்து விட்டது. இந்த சீரியல்களை பார்த்து கெட்டு போகும் குடும்ப பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

இந்த சீரியல்களிலும் பெரும்பாலும் தவறாக உறவுகள்தான் காட்டப்படுகின்றன. இது பார்க்க ரசிக்கும்படியாக இருந்தாலும் பார்க்கும் பெண்களுக்கு இது நல்லதோ என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது.


சினிமாவுக்கு சென்சார் போர்டு இருப்பது போல சின்னத்திரைக்கு இல்லை. இதனால் சில சீரியல்களில் ஆபாசம் தலைதூக்க ஆரம்பித்து விட்டது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரபல தொலைக்காட்சியில் நாகினி என்ற பெயரில் டப்பிங் சீரியல் ஒளிபரப்பப்பட்டது.

இந்த சீரியலுக்கு ஆண்களும் அடியாக இருந்தார்கள். காரணம் அதில் வந்த கவர்ச்சி காட்சிகள். அதுபோல தற்போது மேலும் பல இந்தி டப்பிங் சீரியல்கள் ஒளிபரப்பப்படுகின்றன. அதில் கவர்ச்சி என்ற ஆபாசம் மிகுந்த காட்சிகள் ஆக்கிமித்து உள்ளன. இதனை பார்க்கும் தாய்மார்கள் குழந்தைகளுடன் பார்க்க முடியாமல் நெளிய ஆரம்பித்து விட்டனர்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!