கோடிக்கணக்கில் கொடுத்தாலும் அவனுடன் நடிக்க மாட்டேன்..!! காஜல் அதிரடி..!!


நடிகை காஜல் அகர்வாலின் மார்கெட் தற்போது இறங்கு முகமாக உள்ளது. இந்நிலையில், எந்த அளவுக்கும் கவர்ச்சி காட்டி நடிக்க தயார் என்று தனக்கு நெருக்கமான இயக்குனர்களுக்கு தூது விட்டுவ வருகிறார் அம்மணி

கடந்த இரண்டு வருடங்களாக பெயர் சொல்லிக்கொள்ளும் படி பெரிய ஹிட் படம் அமையாததால் கடுமையான வருத்தத்தில் இருக்கிறார். தமிழில், மெர்சல் படம் மிகப்பெரிய ஹிட் அடித்தாலும் அதில் மூன்று ஹீரோயின்கள் என்வதால் எந்த நடிகைக்கும் அதில் பங்கில்லாமல் போனது.


தான் எந்த அளவுக்கும் கவர்ச்சி காட்ட ரெடி என்பதை மறைமுகமாக உணர்த்தும் வகையில் சமீபத்தில் விருது விழா மற்றும் சினிமா விழாக்களில் மிகவும் கவர்ச்சியான உடைகளை அணிந்து வந்து ஷாக்கொடுத்தார். அம்மணியின் இந்த முடிவுக்கு பின்னர் அறை டஜன் பட வாய்ப்புகள் குவிந்துள்ளன.

இந்நிலையில், ஹிந்தியில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த “குயின்” திரைப்படத்தின் ரீமேக்கான “பாரிஸ் பாரிஸ்” படத்தில் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க நடிகர் நவ்தீப்பை அணுகியுள்ளனர். இந்த விஷயத்தை அறிந்த காஜல் அகர்வால். அவருடன் நான் நடிக்க மாட்டேன். தயவுசெஞ்சு வேறு யாரையாவது நடிக்க வையுங்கள் என்று தயாரிப்பு தரப்பிடம் கோபமாக கூறியுள்ளார். இதனால், இப்போது நடிகர் ரமேஷ் அரவிந்த் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

நடிகர் நவ்தீப் சந்தமாமா என்ற படத்தில் காஜல் அகர்வாலுக்கு ஜோடியாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!