சமந்தா சொன்ன ஒரு பதிலால் வாயடைத்துப்போன ரசிகர்கள்..!! எதனால் தெரியுமா..?


நடிகை சமந்தா நடிப்பில் வெளியான ரங்கஸ்தளம் திரைப்படம் நல்ல வசூலை பெற்று வருகின்றது. இந்நிலையில், நடிகை சமந்தா செய்து வரும் ஒரு காரியம் சக நடிகைகளை வியப்படைய செய்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

ஆம் , பொதுவாக பெண்கள் என்றாலே திருமணதிற்கு பிறகு உடல் எடை கூடிவிடுவார்கள் என்று தான் கூறுவார்கள். அதனால், எந்த வகையில் தன்னுடைய உடல் எடை கூடி விடக்கூடாது என்பதற்காக தினமும் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார் அம்மணி.

வியர்வை சிந்த சிந்த வொர்க்-அவுட் செய்யும் வீடியோக்களை தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் சேர் செய்து வறுகிறார் சமந்தா.


மேலும், தான் நடிப்பதற்கு எந்த வித தடையும் இல்லை என்பதால், நல்ல கதையம்சம் உள்ள படங்களை ஒப்புக்கொண்டு நடிப்பது என்ற முடிவுக்கு வந்துள்ளார். இதனால், திருமணத்திற்கு பிறகும் தன்னுடைய உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் சமந்தா.

இது குறித்து நடிகை சமந்தா கூறியுள்ளதாவது, நான் குழந்தை பெற்றுக்கொண்டாலும் தொடர்ந்து நடிப்பேன். உடற்ப்பயிற்சி செய்வேன். அதனை ஒரு நாளும் நிறுத்த மாட்டேன் என்று கூறியுள்ளார்.

இவர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்த சீமராஜா திரைப்படம் விரைவில் திரைக்கு வரவிருபப்து குறிப்பிடதக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!