உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கவுள்ள ‘இந்தியன் 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது தெரிந்ததே.
இந்த நிலையில் கமல்ஹாசன் கடந்த சில இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஒரு அரசியல் படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டு அந்த படத்திற்கு ‘தலைவன் இருக்கின்றான்’ என்ற டைட்டிலையும் அறிவித்தார். இந்த டைட்டிலை கமல்ஹாசன் ஒருசில ஆண்டுகளுக்கு முன்னரே பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கமல்ஹாசன் நடித்து இயக்கும் இந்த படம் தமிழ், இந்தி என இரண்டு மொழிகளில் தயாராகவிருக்கின்றது. இந்த படத்தில் ஒருசில பாலிவுட் முன்னணி நடிகர், நடிகைகளும் நடிக்கவுள்ளனர். மேலும் இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பார் என்றும் அறிவிக்கப்பட்டது.
Thanks ARR for strengthening the team with your participation.Very few projects feel good & right even as we develop it.Thalaivan Irukkindraan is one such.Your level of excitement for the project is very contagious.Let me pass it on to the rest of our crew @RKFI @LycaProductions https://t.co/SGI3Gn6ezZ
— Kamal Haasan (@ikamalhaasan) July 15, 2019
இந்த நிலையில் சற்றுமுன் கமல்ஹாசன் ‘தலைவன் இருக்கின்றான்’ படம் குறித்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானிடம் கலந்தாலோசித்து உள்ளார். இந்த தகவலை கமல்ஹாசன் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே தங்களது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைந்ததில் மிகவும் மகிழ்ச்சி என்றும் ஒருசில படங்கள் தயாரிக்கும்போது மட்டும் மிகச்சிறந்த உணர்வுகள் கிடைக்கும் என்றும், அவ்வாறான ஒரு படம்தான் ‘தலைவன் இருக்கின்றான்’ என்றும், இந்த படத்தின் தகவல்கள் ரசிகர்களை ஆச்சரியத்தின் உச்சிக்கே அழைத்து செல்லும் என்றும், இந்த படம் குறித்த முழு விபரங்களை விரைவில் எதிர்பாருங்கள் என்றும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ள ‘தலைவன் இருக்கின்றான்’ படம் குறித்த ஆச்சரியமான தகவல்களை விரைவில் எதிர்பார்க்கலாம்.
* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.