பிரபல பாடலாசிரியர் கபிலன் மகள் எடுத்த விபரீத முடிவு- இதுதான் காரணமா?

பிரபல திரைப்பட பாடலாசிரியர் மற்றும் கவிஞர் கபிலனின் மகள் தூரிகை (வயது 28) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் நேற்று இரவு தூக்கில் தொங்கிய நிலையில் தூரிகையை மீட்டு வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு, தூரிகை இறந்துவிட்டதை மருத்துவர்கள் உறுதி செய்தனர். இதையடுத்து அவரது உடலை மீட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். திருமணத்துக்கு பெற்றோர் வற்புறுத்தியதால் தூரிகை தற்கொலை செய்து கொண்டதாக முதல் கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது.

எம்.பி.ஏ படித்துள்ள தூரிகை முன்னணி ஆங்கில ஊடகத்தில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர், “பீயிங் வுமன்” (Being Women) என்னும் இணைய இதழையும் தொடங்கி, நடத்திவந்தார். தூரிகை எழுத்தாளராக மட்டுமில்லாமல், ஆடை வடிவமைப்பாளராகவும் பல்வேறு திரைப்படங்களில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் அவரின் தற்கொலை சினிமா மற்றும் எழுத்தாளர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!