பல வருடங்களுக்கு பிறகு ஒரே நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் நடிகர்கள் ரஜினி, கமல், விஜய், அஜித் !

முன்னணி நடிகர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி 
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக திகழ்ந்து வரும் ரஜினி, கமல், விஜய், அஜித் உள்ளிட்ட நான்கு பேரும் முக்கிய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள இருப்பதாக் தகவல் வெளியாகியுள்ளது.

ஆம், 187 நாடுகள் பங்கேற்க்கும் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் சென்னை மாமல்லபுரத்தில் நடக்கவுள்ளது. இந்த சர்வதேச செஸ் போட்டி முதல்முறையாக இந்தியாவில் சென்னையில் நடைபெறுகிறது.

வரும் ஜூலை 28 ஆம் தேதி இந்த 44-வது செஸ் செஸ் ஒலிம்பியாட்-ன் தொடக்க விழா நடைபெற இருக்கிறது. இதில் கலந்து கொள்ள ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடைசியாக இவர்கள் அனைவரும் பாசத் தலைவனுக்கு பாராட்டு விழா என்ற நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டனர். அதில் நடிகர் அஜித் பேசிய விஷயம் பெரிய வைரலானது. 
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!