சல்மான் கான் படத்தில் இணையும் நான்கு தென்னிந்திய நடிகைகள்.. லிஸ்டில் சமந்தாவும் இருக்கிறார்

சல்மான் கான்
பாலிவுட் திரையுலகில் மூத்த முன்னணி ஹீரோக்களில் ஒருவர் சல்மான் கான். இவர் நடிப்பில் கடந்த பல வருடங்களுக்கு முன் வெளிவந்த மசாலா கலந்த திரைப்படம் நோ என்ட்ரி.

இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகாவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் நடிகை சமந்தா கதாநாயகியாக நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒரே படத்தில் இணையும் நான்கு முன்னணி நடிகைகள்
இவர் மட்டுமின்றி தமன்னா மற்றும் ராஷ்மிகா மந்தனாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர்.

மேலும், இப்படத்தில் இடம்பெறும் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆட, நடிகை பூஜா ஹெக்டேவிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் தெரியவந்துள்ளது.

இதன்முலம் தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகைகளாக வலம் வரும் நான்கு கதாநாயகிகளை ஒரே படத்தில் நடிக்கவைக்க திட்டமிட்டுள்ளார் சல்மான் கான்.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!