கே.ஜி.எஃப்3 அறிவிப்பு.. எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள் by priya | @ | April 16, 2022 9:43 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest யாஷ் நடிப்பில் உலகமுழுவதும் வெளியாகி இருக்கும் கே.ஜி.எஃப் 2 படத்திற்கு பிறகு தற்போது அதன் பாகம் 3 வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.தமிழ் புத்தாண்டை முன்னிட்டு யாஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘கே.ஜி.எஃப் 2’ . முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இப்படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் உருவாக்கி இருந்தார். இப்படத்தில் யாஷுடன் ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், ரவீனா டாண்டன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருந்தார்கள்.இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் உலகமுழுவதும் வெளியானது. ரசிகர்களிடையே அதிக வரவேற்பு பெற்று வரும் இப்படத்தின் முதல் நாள் வசூல் இந்தியா முழுவதும் ரூ.134.5 கோடி வசூல் செய்திருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்நிலையில் இப்படத்தின் மூன்றாம் பாகத்தை ரசிகர்கள் எதிர்ப்பார்த்திருக்கின்றனர். கே.ஜி.எஃப் 2ம் பாகம் படத்தின் இறுதியில் பாகம் 3ன் அறிவிப்பை படக்குழு அறிவித்திருந்தனர். கே.ஜி.எஃப் 2 வெற்றியில் மூழ்கியிருந்த ரசிகர்கள் அதிலிருந்து மீள்வதற்குள் இந்த அறிவிப்பு வெளியானதால் ரசிகர்கள் பெரும் எதிர்ப்பார்ப்போடு அதன் அடுத்த பாகத்தை எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர். இதனை சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts படப்பிடிப்புக்கு சரியாக வருவது இல்லையா? வதந்திக்கு யோகிபாபு விளக்கம் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து… ரசிகரின் ஆபாச கேள்வியால் நடிகை ஷாலு ஷம்மு கோபம் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து… விஜய் போல் என்னால் நடனம் ஆட முடியாது நடிகர் ஷாருக்கான் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து…