நடிகை ரஷ்மிகாவிற்கு விஜய்யை கண்டாலே பயமாம் !

நேஷனல் Crush-ஆன ரஷ்மிகா  
நடிகை ரஷ்மிகா மந்தனா தென்னிந்தியளவில் மிகவும் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருபவர்.
இவர் தொடர்ந்து தமிழ், தெலுங்கு என முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வருகிறார், அந்த வகையில் அல்லு அர்ஜுன், மகேஷ் பாபு, கார்த்தி என அவர் தொடர்ந்து டாப் ஹீரோக்களுடன் நடித்து வருகிறார்.

மேலும் சமீபத்தில் தெலுங்கில் வெளியான புஷ்பா திரைப்படத்தில் நடிகை ரஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்திருந்தார். பிளாக் பஸ்டர் ஹிட்டான அப்படத்தின் மூலம் ரஷ்மிகா இந்தியளவில் பிரபலமானார். 

விஜய்யை கண்டு பயந்தேன்  
இந்நிலையில் ரஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரும் பிரபலமான இளம் நடிகர்கள், இவர்கள் நடிப்பில் கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் உள்ளிட்ட படங்களில் ஜோடியாக நடித்துள்ளனர்
இதற்கிடையே ரஷ்மிகா கடந்த 2018-ல் கீதா கோவிந்தம் படத்தின் போது ஒரு பேட்டியில் விஜய் தேவரகொண்டா குறித்து பேசியிருந்தார். அதில் “விஜய்யுடன் நடிக்கும் போது நான் அவரை கண்டு பயந்தேன்.

ஏன்னென்றால் புதியவர்கள் என்றால் எனக்கு பயம். விஜய் மிகவும் கூல்லான ஒருவர், அவருடன் வேலை செய்வது மிகவும் எளிது. எங்கள் நட்பின் சிறந்த அம்சம் என்னவென்றால், ஒரு பையனைப் புரிந்துகொள்ள நான் கடினமாக முயற்சி செய்ய வேண்டியதில்லை” என பேசியுள்ளார்.  
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!