என்னப்பா.. சொல்றீங்க அருவி இயக்குனரும் சிவகார்த்திகேயனும் அப்படியானவங்களா…?


சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்ற “அருவி” திரைப்படத்தின் இயக்குனர் அருண் நம்ம சிவகார்த்திகேயனின் உறவினர் என்பது தெரியவந்துள்ளது

அருவி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அருண். தன்னுடைய முதல் படத்திலேயே தன்னை பற்றியும், தான் இயக்கிய படத்தை பற்றியும் பேசவைத்துவிட்டார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

இந்த படம் ஆஸ்மா என்ற படத்தின் தழுவல் தான் என்ற குற்றச்சாட்டிற்கு பதிலளித்த அவர். அருவி படம் ஆஸ்மா படத்தின் தழுவல் என்று கூறுபவர்கள் ஒரு முறை ஆஸ்மா படத்தையும் பார்த்துவிட்டு பேசவேண்டும்


இரண்டு படங்களையும் பார்த்த பின் அவர்களுக்கே உண்மை என்னவென்று தெரியும். இதைபற்றி மேலும் பேசினால் எந்த பயனும் இல்லை என்று கூறியுள்ளார்.

இவர் சின்னத்திரையில் ஒளிபரப்பான ராதிகா சரத்குமாரின் “அண்ணாமலை” என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்துள்ளார்.ஏற்கனவே ஒரு விழா மேடையில் சிவகார்த்திகேயன் எனது உறவினர் என்று கூறியுள்ளார் அருண். இந்நிலையில், இவர் சிவகார்த்திகேயனின் கசின் என்று தெரியவந்துள்ளது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!