சென்னை காவல்நிலையத்தில் நடிகை ஸ்ரீரெட்டி திடுக்கிடும் புகார்!

தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலக பிரபலங்கள் மீது அதிரடியாக பாலியல் குற்றச்சாட்டுக்களை கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீரெட்டி. இவர் தற்போது சென்னையில் தங்கி ஒருசில தமிழ்ப்படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் இன்று சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நடிகை ஸ்ரீரெட்டி திடுக்கிடும் புகார் ஒன்றை அளித்துள்ளார். வளசரவாக்கம் வீட்டில் தங்கி இருந்த தன்னை 2 மர்மநபர்கள் தாக்கியதாகவும், அவர்களை கண்டுபிடித்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஸ்ரீரெட்டி தனது புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.

I never forget my goal I wanted to fight on polachi issue that's y I am here..i came here for that mainly..my enemies r…

Gepostet von Sri Reddy am Donnerstag, 21. März 2019

ஸ்ரீரெட்டியின் இந்த புகார் மனுவை பெற்றுக்கொண்ட வளசரவாக்கம் காவல் துறையினர் இந்த மனு மீது விசாரணை நடத்தி வருகின்றனர். ஸ்ரீரெட்டியை தாக்கிய மர்ம நபர்கள் யாராக இருக்கும் என்பதே கோலிவுட்டின் பரபரப்பான செய்தியாக தற்போது உள்ளது


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.