அதனால்தான் நான் எதுவும் பேசல! பொள்ளாச்சி சம்பவத்திற்கு சமந்தாவின் ஷாக்கிங் பதில்!

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் சமந்தா. தமிழில் தல அஜித், ரஜினி, கமலை தவிர மற்ற பெரும்பாலான நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து விட்டார்.

மேலும் இவர் சென்னையை சேர்ந்த தமிழ் பெண். அப்படியிருந்தும் இதுவரை சமந்தா பொள்ளாச்சி விவகாரம் குறித்து ஒரு முறை கூட வாய் திறந்து பேசவில்லை.

இது குறித்து பேட்டி ஒன்றில் கேட்டதற்கு அதிர்ச்சிகரமான பதிலை கூறியுள்ளார். இது போன்ற விசயங்கள் பேச கூடாது. அமைதியாக இருந்து விட வேண்டும்.

வெறும் 4 பேருக்கு தெரிந்த விசியம் நான் பேசுவதால் 4 லட்சம் பேருக்கு தெரிய வரும். அதனால் தான் நான் இதை பற்றி பேசவில்லை என கூறியுள்ளார்.

சமந்தாவின் இந்த பதிலை கேட்ட நெட்டிசன்கள் இதுவே உங்களுக்கு நெருங்கியவர்களுக்கு நடந்திருந்தால் இப்படி தான் அமைதியாக இருந்திருப்பீர்களா? என கூறியுள்ளார்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.