அரிய வகை நோயால் நடிகை அனுஷ்கா அவதியா..? நண்பர்கள் விளக்கம்..

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளுள் முக்கியமானவர் அனுஷ்கா. அருந்ததி, இஞ்சி இடுப்பழகி, பாகமதி, பாகுபலி போன்ற படங்களில் தன்னுடைய கம்பீரமான நடிப்பால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் அனுஷ்கா. இவர் இஞ்சி இடுப்பழகி படத்துக்காக உடல் எடையை ஏற்றி அதை குறைக்க முடியாமல் சிரமப்பட்டார். அதனால் பட வாய்ப்புகளும் குறைந்தன. பாகுபலி 2 படத்துக்கு பிறகு சிலகாலம் நடிப்பதை தவிர்த்து வந்தார்.

தற்போது இவர் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகை அனுஷ்காவிற்கு அரிய வகை நோய் உள்ளதாக தகவல் பரவி வருகிறது. அதாவது, இவருக்கு அரிதான சிரிக்கும் நோய் உள்ளது என்றும் இவர் சிரிக்க ஆரம்பித்தால் 15 முதல் 20 நிமிடங்கள் தொடர்ந்து சிரித்துக் கொண்டே இருப்பார் என்றும் அனுஷ்கா பேட்டியில் தெரிவித்ததாக செய்திகள் வெளியானது. ஆனால் இந்த தகவலில் உண்மை இல்லை என்று அவரது நெருங்கிய நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.



  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!