பிளட் மணி – விமர்சனம்

நடிகர் சிரிஷ்
நடிகை பிரியா பவானி சங்கர்
இயக்குனர் சர்ஜுன்.கே.எம்
இசை சதீஷ் ரகுநந்தன்
ஓளிப்பதிவு ஜி.பாலமுருகன்

பிரியா பவானி சங்கர் தான் பணிபுரியும் சேனலில் புதிதாக பொறுப்பேற்கிறார். இந்த நேரத்தில் குவைத்தில் சட்டவிரோத செயலில் ஈடுபட்டதற்காக கிஷோர் அவரது தம்பி இருவருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்படுகிறது. இதைத்தடுக்கும் வகையில் தனது சேனலில் செய்தி வெளியிடுகிறார் பிரியா. சீனியரான பஞ்சு சுப்பு இதில் உள்ள சிக்கலை எடுத்துக்கூறி இதைக் கைவிடுமாறு கூறுகிறார்.
ஆனாலும் பிரியா, அப்பாவி தமிழர்களைக் காப்பாற்றப் போராட முடிவெடுக்கிறார். இந்த முயற்சியில் பிரியா வெற்றியடைந்தாரா? இல்லையா? அப்பாவி தமிழர்களின் உயிர் காப்பாற்றப்பட்டதா? என்பதை படத்தின் மீதிக்கதை.

பத்திரிகையாளராக நடித்திருக்கிறார் பிரியா பவானி சங்கர். ஒரு செய்தியைச் சொல்லி அலுவலகத்தில் அவமதிக்கும் நேரத்தில் இயல்பாக முகபாவனையைக் காட்டுகிறார், கிஷோரின் மகள் பேசுவதைக் கேட்டு உருகுவதும் இலங்கை மண்ணில் பாதிக்கப்பட்ட குடும்பத்தைத் தேடிப்போய் பேசுவதும் என்று தன் பணியை நிறைவாகவே செய்திருக்கிறார் பிரியா.
மெட்ரோ சிரிஷ் பிரியாவிற்கு துணையாக இருக்கிறார். கிஷோரின் குவைத் வாழ்க்கையும் அவர் சிறை போராட்டமும் கலங்க வைக்கிறது.

கிஷோரின் தாய், குழந்தை கிராமத்து மனிதர்கள் என்று பலரும் சிறப்பு சேர்த்திருக்கிறார்கள். ஜி.பாலமுருகன் ஒளிப்பதிவு காட்சிகளின் உணர்வைப் பிரதிபலிக்கிறது. சதீஷ் ரகுநந்தன் பின்னணி இசை கதையின் பரபரப்பை நமக்குள் பாய்ச்சுகிறது. பயணம்.., அந்தாண்ட ஆகாசம் பாடல்கள் கலங்கச்செய்கிறது. குவைத்தில் தமிழர்களும் படும் கஷ்டங்களை சொல்லியிருக்கிறார் இயக்குனர் சர்ஜுன்.

மொத்தத்தில் ‘பிளட் மணி’ திகில் பயணம்
.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!