இந்த நாட்டின் ராஜாவையே மண்டியிட வைத்துவிட்டனர் விவசாயிகள்- பிரகாஷ்ராஜ் புகாழாரம்

பிரகாஷ்ராஜ் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் கலக்கியுள்ளார். இவர் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கின்றார் என்றாலே, அதற்கு பெரிய வரவேற்பு இருக்கும்.

நீண்ட நாட்கள் அரசியல், மக்கள்பணி என்றே இருந்த இவர் தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கிவிட்டார்.

இந்நிலையில் மத்திய அரசு மூன்று வேளான் சட்டங்களை ரத்து செய்வதாக நேற்று அறிவித்தது.
இதை தொடர்ந்து பல பிரபலங்கள் விவசாயிகள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்று கூறி வருகின்றனர்.

இதற்கு பிரகாஷ்ராஜ் ‘ஆரம்பத்திலிருந்தே இந்த வேளான் சட்டத்திற்கு எதிராக நான் இருக்கிறேன்.
விவசாயிகளுக்கு ஆதரவாக இருந்து வருகின்றேன், இன்றைய முடிவு ஒரு நாட்டின் ராஜாவையே விவசாயிகள் மண்டியிட வைத்துள்ளனர்’ என கூறியுள்ளார்.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!