ஆர்யன் கான்-ஐ விடுவிக்க ரூ.25 கோடி கேட்டு மிரட்டலா?

மும்பை சொகுசு கப்பலில் போதை பொருள் பயன்படுத்தி கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாக பாலிவுட் ஸ்டாரான ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் கடந்த அக்டோபர் 3-ம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.

இது இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. ஆனால் ஆர்யனுக்கு இதுவரை ஜாமின் கிடைக்கப்படவில்லை.

இந்நிலையில் தான் என்சிபி மும்பை மண்டல இயக்குநர் சமீர் வான்கடே உள்ளிட்ட அதிகாரிகள் மீது பணம் கேட்டு மிரட்டியதாக 4 புகார் மனுக்கள் வந்துள்ளது. இந்த தகவலை மும்பை காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதனை அடுத்து காவல் துறையினர் வான்கடேவிடம் நேற்று 4 மணி நேரம் விசாரித்ததாகவும், பெரும்பாலான கேள்விகளுக்கு அவர் முறையான பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதன் உண்மை தன்மையை நாம் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டி உள்ளது.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!