பிரபல நடிகைக்கு பாலியல் தொல்லை..!! அதிரடி முடிவால் சிக்கிய மர்ம நபர்கள்..!!


பிரபல மலையாள நடிகையான பார்வதி சமீபத்தில் பாலியல் ரீதியான துன்புறுத்தல் குறித்த கருத்துகளை தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

மேலும் இவர் நடிப்பில் வெளியான படங்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் கேரளா சைபர் கிரைம் அலுவலகத்தில் நடிகை பார்வதி புகார் ஒன்று அளித்துள்ளார்.

அதில் சமூக வலைதளங்களில் கடந்த 2 வாரங்களாக சிலர் வேண்டுமென்றே தன்னை பற்றி தவறான கருத்துகளை பதிவிடுவதாகவும் ,பாலியல் ரீதியாக அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.


இதனையடுத்து சமூக வலைதளங்களில் 5 பதிவர்களின் கணக்குகளை போலீசார் ஆய்வு செய்த போது போலி பெயரில் கணக்குகள் ஆரம்பித்து செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

பிறகு அவர்கள் குறித்த விபரங்களை அளிக்குமாறு டுவிட்டர் நிறுவனத்திடம் போலீசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!