அம்மாடியோவ்.. 20 நாட்கள் மரத்தில் தலைகீழாக தொங்கிய நடிகை..!! எதற்காக தெரியுமா..?


சமீபகாலமாக தமிழில் பேய் படங்களின் வருகை அதிகரித்து உள்ளது. வழக்கமாக பேய்தான் நம்மை பயமுறுத்தும்.

ஆனால் குழந்தைகள் எல்லாம் சேர்ந்து கொண்டு பேயை மிரட்டும் வகையில் சங்கு சக்கரம் என்ற படம் தயாராகி உள்ளது.

இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.


மேலும் 30 வருடங்களுக்கு முன்பு வெளியான மை டியர் குட்டி சாத்தான் படத்தை நினைவூட்டுவது போலவும் உள்ளது.

இந்த படத்தில் நாயகியாக கீதா நடித்துள்ளார். இதற்காக இவர் படப்பிடிப்பின் பாதி நேரம், சுமார் 20 நாட்களுக்கு மேல் கயிறு கட்டி அந்தரத்தில் தொங்கியபடியே இருந்துள்ளார். படத்தின் கேரக்டரின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு இவ்வாறு சிரத்தை எடுத்து நடித்தாராம்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!