இனிமேல் இவருடன் என்னால் வாழ முடியாது..!! கதறும் தொகுப்பாளினி..!!


பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினியான டிடி, தற்போது திரைப்படங்களில் நடிப்பதிலும் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். இதற்கிடையே திருமணமாகி ஒரு சில ஆண்டுகளிலேயே தனது கணவரை பிரிய டிடி விவாகரத்தும் கேட்டிருக்கிறார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை டிடி திருமணம் செய்துக் கொண்டார். இரு வீட்டார் சம்மதத்தோடு இந்த திருமணம் நடைபெற்றாலும், திருமணத்திற்கு பிறகு டிடி தொகுப்பாளினியாக பணியாற்றுவது ஸ்ரீகாந்த் குடும்பத்தாருக்கு பிடிக்கவில்லையாம்.


மேலும், டிடி திரைப்படங்களிலும் நடிக்க தொடங்கியது, அவரது மாமியார் குடும்பத்தாரை ஆத்திரப்பட வைத்ததாம்.

அவர்கள் எவ்வளவும் சொல்லும், டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது மற்றும் படங்களில் நடிப்பதை டிடி நிறுத்தவில்லையாம். இதனிடையே ஸ்ரீகாந்துக்கும் டிடி க்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்த நிலையில், நேற்று முறைப்படி நீதிமன்றத்தில் டிடி விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!