துன்பம் சுவையாக மாறுகிறது.. இயக்குனர் சீனு ராமசாமி டுவீட்

கூடல் நகர் படத்தின் மூலம் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் சீனு ராமசாமி. அதன்பின்னர் தென்மேற்கு பருவக்காற்று, நீர்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே உள்ளிட்ட படங்களை இயக்கி ரசிகர்களை கவர்ந்தார். சமீபத்தில் இவர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மாமனிதன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் பல விருதுகளையும் இப்படம் குவித்தது.

இந்நிலையில் இயக்குனர் சீனு ராமசாமி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருப்பது பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது. சீர்காழி கோவிந்தராஜனின் பாடல் ஒன்றை இணைத்து அவர் பதிட்டிருப்பது,

மேடைக் கச்சேரிகளுக்கு பெரிய ரசிகனாகிய நான் இவரை வியந்தேன் நெகிழ்ச்சியாகவும் இருந்தது, இந்த பாடலை நீங்கள் கேட்டு ருப்பீர்கள் இச்சோகப்பாட்டை ஒருவர் இன்முகத்தோடு பாடி நம் இதயத்தை கனக்கச் செய்கிறார் அவர் அய்யா சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள்.. துன்பம் சுவையாக மாறுகிறது அதை இனிப்போடு நாம் எதிர்கொண்டால் என்பதை இவர் பாடிய விதத்தை காணுங்கால் அறியலாம். குரு வணக்கம் தேச வணக்கம் சொல்லி முடிகிறது கணீர் கச்சேரி என்று சீனு ராமசாமி பதிவிட்டுள்ளார்.


  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!