இத்தகைய கனவு வேடத்திற்காக 10 ஆண்டுகளாக காத்திருந்தேன் – நெகிழும் சமந்தா

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, சகுந்தலம் படத்தின் பூஜையில் கலந்துகொண்டார்.

சகுந்தலை புராண கதை, சினிமா படமாக தயாராகிறது. படத்துக்கு சகுந்தலம் என்று பெயரிட்டுள்ளனர். தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகும் இந்தப் படத்தை குணசேகர் இயக்குகிறார். இவர் ஏற்கனவே அனுஷ்கா நடித்து தமிழ், தெலுங்கில் வெளியான ருத்ரமா தேவி படத்தை இயக்கியவர்.

சகுந்தலம் படத்தில் சகுந்தலா கதாபாத்திரத்தில் சமந்தா நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக துஷ்யந்தன் கதாபாத்திரத்தில், மலையாள இளம் நடிகர் தேவ் மோகன் நடிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. இதில் கலந்துகொண்டு பேசிய நடிகை சமந்தா, “சினிமாவில் நான் இதுவரை 50 படங்களில் நடித்துள்ளேன். வில்லி, ஆக்‌ஷன் நாயகி என பல்வேறு கதாபாத்திரங்களை ஏற்று நடித்திருக்கிறேன். ஆனால் சரித்திர படத்தில் நடிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. தற்போது அது நிறைவேறி உள்ளது. இத்தகைய கனவு வேடம் கிடைக்க எனக்கு 10 வருடங்கள் ஆகி உள்ளது. இப்படத்திற்காக 100 சதவீதம் உழைப்பேன்” என கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!