‘திரிஷ்யம் 2’ ரீமேக்கில் நடிப்பது உண்மையா? – நடிகர் ராணா விளக்கம்

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற ‘திரிஷ்யம்-2 ’ படத்தை பிற மொழிகளிலும் ரீமேக் செய்கின்றனர்.

மலையாளத்தில் கடந்த மாதம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற ‘திரிஷ்யம்-2’ திரைப்படம், தற்போது தெலுங்கில் ரீமேக் ஆகி வருகிறது. ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் வெங்கடேஷ், மீனா, நதியா, பூர்ணா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மலையாளத்தில் திரிஷ்யம் இரண்டாம் பாகத்தில் ஐஜி கதாபாத்திரம் ஒன்று புதிதாக சேர்க்கப்பட்டிருந்தது. அதில் நடிகர் முரளிகோபி நடித்திருந்தார். தெலுங்கில் அந்த கதாபாத்திரத்தில் நடிகர் ராணாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகின.

இந்நிலையில், அதுகுறித்து நடிகர் ராணா விளக்கம் அளித்துள்ளார். திரிஷ்யம் 2 ரீமேக்கில் தான் நடிக்கவில்லை. அதுகுறித்து பரவும் தகவல் உண்மையில்லை எனக்கூறி உள்ளார். இதன்மூலம் அவர் திரிஷ்யம் 2 ரீமேக்கில் நடிக்கவில்லை என்பது உறுதி ஆகி உள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!