ஆஸ்கர் விருதுக்கான இறுதிப் பட்டியல் வெளியீடு…. ‘சூரரைப்போற்று’ இடம்பெறாததால் ரசிகர்கள் ஏமாற்றம்

ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை மையப்படுத்தி ‘சூரரைப்போற்று’ படம் உருவாக்கப்பட்டிருந்தது.

சூர்யா நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘சூரரைப்போற்று’. சுதா கொங்கரா இயக்கி இருந்த இப்படம் ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருந்தது. தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகிய இப்படத்தை 2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்திருந்தது.

இதனிடையே ஆஸ்கர் விருதின் பொதுப்பிரிவுக்கு இந்த படம் தேர்வு செய்யப்பட்டதாக ஜனவரி மாதம் அறிவிக்கப்பட்டது. பின்னர் ஆஸ்கர் விருதுக்கு தகுதி பெற்ற 366 திரைப்படங்களின் பட்டியலிலும் ‘சூரரைப்போற்று’ திரைப்படம் இடம்பெற்றிருந்தது. இதனால் இப்படம் ஆஸ்கர் விருதுக்கான இறுதிப் பட்டியலில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், ஆஸ்கர் விருதுக்கு தேர்வான படங்களின் இறுதிப் பட்டியல் இன்று அறிவிக்கப்பட்டது. நடிகை பிரியங்கா சோப்ராவும், அவரது கணவர் நிக் ஜோனசும் இந்த பட்டியலை அறிவித்தனர். ஆனால் அவர்கள் அறிவித்த இறுதிப் பட்டியலில் சூரரைப் போற்று திரைப்படம் இடம்பெறவில்லை. இதனால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!