சூப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்த அரசியல் நகர்வு! பலே திட்டம்! வியூகம் இதுதானோ?

பரபரப்பான இந்த தேர்தல் நேரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அரசியல் வருகை மிகுந்த கவனத்தை பெற்றிருக்கும் நிலையில் அவர் கட்சி தொடங்குவது உறுதி. இம்மாத இறுதியில் தேதியை அறிவிப்பேன் என கூறியிருந்தார். இதன் பின் சில நாட்களில் அவர் மக்கள் சேவை கட்சி என கட்சியின் பெயரை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துவிட்டதாகவும், ஆட்டோ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் தகவல் வெளியாகின.

அதே வேளையில் அண்ணாத்த படத்தை முடித்துக்கொடுப்பது என் கடமை என கூறியிருந்தார். தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் படப்பிடிப்புகளில் பங்கேற்று வருகிறார். கட்சி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை பொறுமை காத்திருங்கள் என கூறியிருந்தார்.

இந்நிலையில் அவர் டிசம்பர் 31 ல் கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடுவதாகவும், எம்.ஜி.ஆரின் பிறந்த நாளில் கட்சி தொடங்க திட்டம் என்றும் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!