பிரபல நடிகையின் நிஜவாழ்க்கையை அம்பலப்படுத்திய திரைப்படம்..!! கடுப்பில் குடும்பத்தினர்..!!!

சமீபகாலங்களில் தொலைகாட்சிகள் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது. இதனால், தொலைகாட்சியை பிரபலப்படுத்த பல புதிய நிகழ்சிகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. விளைவாக, தொலைகாட்சிகள் அனைத்தும் தொல்லைகாட்சிகளாக மாறிவிட்டன.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

ஆரம்பத்தில் இருந்தே இளைஞர்களின் வெறுப்பை பெற்றுள்ள ஒரு நிகழ்ச்சி என்றால் அது “சொல்வதெல்லாம் உண்மை” நிகழ்ச்சிதான். ஒரு குடும்பத்தில் நடக்கும் பிரச்னையை ஊருக்கே வெளிச்சம் போட்டு காட்டுவது அநியாயம். எல்லோர் வீட்டிலும் ஏதாவதொரு பிரச்சனை இருந்துகொண்டுதான் இருக்கிறது. அதை, உலகிற்கு சொல்லி அதன் மூலம் பணம் சம்பாதிப்பதா..? என்ற குற்றச்சாட்டு பிராதனமாக இருந்துவருகிறது.

ஆனாலும், இந்த நிகழ்ச்சி 1500 எபிசோடுகளை கடந்து வெற்றிநடை போட்டுக்கொண்டு தான் இருக்கிறது. கிராமப்புரங்கள், படிப்பறிவு குறைந்தவர்கள் இப்படியான நிகழ்சிகளை பொழுது போக்காக பார்த்து வருகிறார்கள்.


இந்த நிகழ்ச்சியில் பின்னணியில் நடக்கும் அதிரவைக்கும் உண்மைகள் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது “அருவி” திரைப்படம். ஒரே ஒரு வித்தியாசம் தான், படத்தின் அந்த நிகழ்ச்சியின் பெயர் “சொல்வதெல்லாம் சத்தியம்” நிஜத்தில் “சொல்வதெல்லாம் உண்மை” அவ்வளவுதான்.

ஏற்கனவே கவண் என்ற திரைப்படம் ரியாலிட்டி ஷோ-க்களின் கொடுமையை புட்டு புட்டு வைத்தது என்பது நினைவில் கொள்ளத்தக்கது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!