பிரபலங்களின் உதவியுடன் ரசிகர்கள் செய்த காரியம்..!! அதிர்ச்சியில் அஜித்..!!


“தல” என்ற இரண்டெழுத்து போதும் அஜித் ரசிகர்களுக்கு உற்சாகம்பீரிட்டு கிளம்பும். அந்த அளவுக்கு சக்தியை அந்த இரண்டு எழுத்துக்கள் தாங்கி வைத்துள்ளன. நடிகர் அஜித், ரசிகர் மன்றமும் வேண்டாம், ஒன்றும் வேண்டாம். முதலில், உன் குடும்பத்தை பார். என் படம் பிடிச்சிருந்தா பாரு. என்று ஒரு அதிரடி அறிக்கையை விட்டு தமிழ்நாடு முழுதும் இருந்த அஜித் ரசிகர் மன்றங்களை ஒரே நாளில் கலைத்தார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

ஆனாலும், அஜித் ரசிகர்கள் அவருக்கு பேனர், கட்-அவுட், பாலபிசேகம் என தொடர்ந்து செய்துதான் வருகிறார்கள். இந்நிலையில், மலேசியாவை சேர்ந்த அஜித் ரசிகர்கள் சிலர் வசதியின்று படிக்க முடியாமல் அவதியுறும் குழந்தைகளை கண்டறிந்து அவர்களை தத்தெடுத்து அவர்களுக்கான படிப்பு செலவினை ஏற்றுக்கொண்டு உதவி செய்துவருகின்றனர். இதனை, ஒரு நாள் இரண்டு என்று நிறுத்திக்கொள்ளாமல் தொடர்ந்து செய்துவருகிறார்கள்.

இதனை அறிந்த சண்டைபயிற்சி இயக்குனர் தீனா, நடிகர் பிரேம்ஜி அமரன் ஆகியோர் அந்த குழுவினரை தங்களது ட்விட்டர் பக்கத்தில் பாரட்டியுள்ளனர். மேலும், மலேசியன் தல ரசிகர்கள் சார்பாக நாளை நடக்கவிருக்கும் நிகழ்ச்சி மூலம் கிடைக்கும் வருவாய் அனைத்தும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு பயன்படுத்தவுள்ளனர். எனவே அவர்களுக்கு தங்களது ஆதரவை கொடுங்கள் எனவும் கூறியுள்ளனர்.

அஜித் படம் திரையில் வரும் பொழுது பார்த்தாலே தெரியும் அஜித் மீது, ரசிகர்கள் வைத்திருக்கும் பாசம்.

இவரின் படங்களை கொண்டாடுவது மட்டும் இல்லாமல் அஜித் பெயரில் தொண்டு நிறுவனம் நடத்திவருகிறார்கள் இதன் மூலம் படிக்க ஆசைபடும் ஏழை மாணவர்களுக்கு உதவி செய்கிறார்கள்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!