சிறந்த அனுபவமாக இருந்தது…. சிம்புவுக்கு நன்றி – ஹன்சிகா டுவிட்

மஹா படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், நடிகை ஹன்சிகா டுவிட்டரில் நடிகர் சிம்புவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

நடிகை ஹன்சிகாவின் 50-வது படம் மஹா. யு.ஆர்.ஜமீல் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருந்த நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு போடப்பட்டது. இதனால் கடந்த 6 மாதங்களாக படப்பிடிப்பு நடத்த முடியாத சூழல் நிலவி வந்தது.

கடந்த மாதம் அரசு அனுமதி அளித்ததையடுத்து மஹா படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று வந்த படப்பிடிப்பு நேற்றுடன் முடிவடைந்துள்ளது.

இந்த தகவலை டுவிட்டரில் பகிர்ந்துள்ள ஹன்சிகா, இப்படம் சிறந்த அனுபவமாக இருந்தது. இந்த பயணத்தில் என்னுடன் பயணித்த அனைவருக்கும் நன்றி, படக்குழுவுக்கு நன்றி, குறிப்பாக சிம்புவுக்கு மிகப்பெரிய நன்றி என பதிவிட்டுள்ளார். மஹா படத்தில் சிம்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!